செய்திகள்

இலங்கையில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை

இலங்கையில், கடந்த 48 மணி நேரத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை.

இந்நிலையில், இறுதியாக அடையாளங்காணப்பட்ட 1950 பேர் மாத்திரமே இதுவரை கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,498 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 441 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 25 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button