செய்திகள்

போக்குவரத்து அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

அரை சொகுசு பேருந்துகள் அனைத்தும் மாலை 7 மணி தொடக்கம் காலை 6 மணி வரையில் மாத்திரம் சேவையில் ஈடுபடும் வகையிலான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இன்று காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், குறித்த தீர்மானத்தோடு இன்னும் பல யோசனைகளை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Back to top button