செய்திகள்

இத்தாலியில் 24 மணிநேரத்தில் 793 பேர் வைரசிற்கு பலி

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 793 பேர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர் என இத்தாலி அறிவித்துள்ளது.

நேற்று 627 பேர் உயிரிழந்த நிலையிலேயே இன்று எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

24 மணிநேரத்தில்  793 பேர் உயிரிழந்துள்ளதை உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் உறுதி செய்துள்ளன.இதன் மூலம் இத்தாலியில்; வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4825 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 53578 ஆக அதிகரித்துள்ளது.

வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டியில் 24 மணிநேரத்தில் 546 பேர் உயிரிழந்துள்ளனர்.

Back to top button