ஆன்மிகம்

(27.08.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil

பஞ்சாங்கம்

நாள்வெள்ளிக்கிழமை
திதிபஞ்சமி இரவு 8.17 வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்அசுவினி
யோகம்அமிர்தயோகம்
ராகுகாலம்காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம்பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம்காலை 9.15 முதல் 10.15 வரை / பகல் 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம்உத்திரம்
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்
Today rasi palan tamil

மேஷ ராசி அன்பர்களே!

தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளின் காரணமாக கையிருப்பு குறைவதுடன், கடன் வாங்கவும் நேரிடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பது தாமதமாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு, வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

னதில் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொடங் கும் முயற்சிகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சில செலவுகள் ஏற்படக்கூடும். அம்பிகை வழிபாடு நன்று.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்கள் மூலம் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம்..

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடு நிகழ்த்தும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே!

திர்பார்க்கும் காரியங்கள் இழுபறியாகி முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சிலருக்குத் திடீரென்று ஏற்படும் வீண்செலவுகள் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். விற்பனை வழக்கம்போல் நடைபெறும். நரசிம்மரை வழிபட, இடையூறுகள் விலகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் பிரச்னைகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

ணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து வராமல் இருந்த பாக்கித் தொகை வந்து சேரும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

னதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளித்துவிடுவீர்கள். லாபம் அதிகரிக்கும். இன்று கால பைரவரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

ற்சாகமான நாள். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிறருக்குக் கொடுத்து வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைத்து மகிழ்ச்சி தரும். சிலர் சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். இன்று பிள்ளைகள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். வியாபாரம் எப்போதும் போல் நடைபெறும். முருகப்பெருமான் வழிபாடு நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நாள்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பண விவகாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

னதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்லவும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளை நீக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நீண்டநாள் சந்திக்காத நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகர ராசி அன்பர்களே!

னதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும். அவர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத்துணை மூலம் பண வரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத செலவு களுக்கு வாய்ப்பு உண்டு.

கும்ப ராசி அன்பர்களே!

திர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர் கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். எதிரிகளால் பிரச்னை ஏற்படும் என்பதால், கவனமாக இருக்கவும். நீங்கள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட, நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மீன ராசி அன்பர்களே!

ன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்துவிடுவதால், சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

Back to top button