செய்திகள்

திருமண தடையை நிவர்த்தி செய்ய வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்

பொதுவாக சிலருக்கு 30 வயதை தாண்டியும் திருமணம் நடைபெறமால் இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் இளமையில் திருமணம் காலதாமதம் இல்லாமல் நடைபெறும் என்பதற்கான ஜோதிட விதிகள் உள்ளன.
இதற்கு முக்கிய காரணம் ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தால் அது கடுமையான திருமண தோஷமாக கருதப்படுகின்றது.
இதில் இருந்து விடுபட சில ஆன்மீக குறிப்புகள் சொல்லப்படுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.
  • வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம்.
  • பூஜைக்கு முன்பு இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மொழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.
  • தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.
  • விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.
  • இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும்.
  • அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமண தடை நீங்கி, நல்ல வரன் அமைந்து மங்களமாக முடியும்.

திருமண தடையை நிவர்த்தி செய்ய வேண்டுமா? இதோ எளிய பரிகாரம் 1

Back to top button