செய்திகள்

பூச்செடியின் புலம்பல்

ஏய்…!
 இளைஞனே
 எத்தனை இரவு பகல்
 பத்திரமாய் ஏந்தி
 பச்சையம் சேர்த்து
 பசி போக்கி
 பகலவன் வரும் வேளையில்
 மொட்டவிழ்த்த
 என் முதல் பூவை
 உன் காதலியின் 
 கூந்தலிற்கு 
 பரிசளித்து விட்டாயே….!
 என் மனது வடிக்கும் 
 வலியின் துளிகள் 
 தெரியவில்லையா உன் கண்களுக்கு?
பூச்செடியின் புலம்பல் 1

Back to top button