செய்திகள்

உடலில் தவறாக ஏற்றப்பட்ட ரத்தம்…. பாலிவுட் சூப்பர்ஸ்டாரின் தற்போதைய சோக நிலை! மக்களே உஷார்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய போது மக்களுக்கு உடல் பரிசோதனைக் குறித்து பேசியுள்ளார்.

அமிதாப்பச்சன் உடல் பரிசோதனை அவசியம் என்பதற்கு காரணம் அவர் தனது வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பினைக் குறித்து கூறியுள்ளார்.

காச நோயிலிருந்து தப்பித்த அவர்ஹெபடைடிஸ் பி பிரச்சினையிலிருந்தும் மீண்டு வந்துள்ளதுடன் தனது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவங்களை மற்றவர்களிடம் கூறி உடல்பரிசோதனை குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றார்.

நடிகர் அமிதாப் உடலில் தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் அவரது கல்லீருல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டு விட்டதாம். தற்போது மீதி இருக்கும் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வரும் அவர் இந்த காச நோய் குறித்து 8 வருடங்கள் தெரியாமல் இருந்துள்ளாராம்.

தற்போது தனக்கு வந்த இந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் வரலாம் என்றும் உடல் பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்றால் இதுபோன்ற பாதிப்புகளை நம்மால் எப்பொழுதுமே கண்டுபிடிக்க முடியாமலும், அதற்கான சிகிச்சை எடுக்க பெற முடியாமலும் போய்விடும் என்று கூறி உடல் பரிசோதனையின் முக்கியத்துவத்தினை விளக்கியுள்ளார்.

Back to top button