விளையாட்டு

சற்றுமுன்னர் உலக சாதனைப் படைத்த லசித் மாலிங்க!!

இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டித் தொடரின் தலைவர் லசித் மாலிங்க இருபதுக்கு 20 போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.

ஹெட்ரிக் உடன் அடுத்தடுத்து நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி தற்சமயம் கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடி வரும் நியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 22 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்துள்ளது.

இதில் முதல் நான்கு விக்கட்டுக்களையும் இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டி தொடரின் தலைவர் லசித் மாலிங்க அடுத்தடுத்து வீழ்த்தியதுடன், அடுத்த ஓவரில் மேலும் ஒரு விக்கட்டையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Back to top button