செய்திகள்

தந்தை உட்பட குடும்பத்தவர்கள் ஐவரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்

அச்சிறுவன் அவனது குடும்பத்தை கொலை செய்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெரிய வரவில்லை.

அமெரிக்காவின் அலபாமாவில் தனது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை தாம் கொலை செய்ததாக 14 வயது சிறுவர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்த சிறுவனின் தந்தை, அவரது இரண்டாவது மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

அச்சிறுவன் அவனது குடும்பத்தை கொலை செய்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெரிய வரவில்லை.

மேலும், அவரது கையில் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Back to top button