ஏனையவை

பிக்பாஸில் திடீர் திருப்பம்! போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறுகிறாரா சேரன்?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது.

சாரவனணின் திடீர் வெளியேற்றம், மதுவின் தற்கொலை முயற்சி, வனிதாவின் அதிரடியான ரீ என்றி என்று சூடுப்பிடித்திருக்கின்றது.

யாரும் எதிர்பாராத நிலையில் மோகன் வைத்தியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் விருந்தினராக அழைத்து வரப்பட்டனர்.

நேற்று வனிதாவுடன் கூட்டு சேர்ந்த ஷெரின் இன்று எதிரியாக மாறியுள்ளார். அப்படியிருக்க இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அது மாத்திரம் இன்றி நடிகர் சேரன் வெளியேற்றப்பட பேவதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றது. இந்த வார நாமினேஷனில் ஷெரின், கவின், லொஸ்லியா, முகேன் மற்றும் சேரன் ஆகியோரின் பெயர் உள்ளது

பார்வையாளர்களின் கருத்து கணிப்பின் படி பார்த்தால் சேரனுக்கே குறைந்த ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இதனால் சேரன் வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ரசிகர்களும் சேரன் வெளியே வர வேண்டும் என்றே விரும்புகின்றனர். அது மாத்திரம் இல்லை, சேரன் வெளியே வந்த பிறகு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்கும் வேலைகளையும் ஆரம்பித்து விடுவார். இதனால், ரசிகர்கள் யார் இந்த வாரம் வெளியேற போகின்றார்கள் என்று எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

ஆரம்பத்தில் ஷெரின் வெளியேற்றப்படுவர் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் திருப்பமாக சேரன் வெளியேற்றப்படுவார் என்ற தகவல் கிளம்பியுள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாக வில்லை. ஞாயிற்று கிழமை தான் தெரியும் யார் வெளியேறப்போகின்றார்கள் என்பது.

எனினும், சேரனின் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கினர் என்றே கூறவேண்டும்.

Back to top button