ஏனையவை

பிக்பாஸ் கவினின் தாயார் கைது செய்யப்பட்டதற்கு காயத்ரி ரகுராம் என்ன கூறியுள்ளார் பாருங்க..!

பிக்பாஸ் கவின் குடும்பத்தில் 3 பெண்கள் சீட்டு நடத்தி பணமோசடி செய்ததாக நேற்று நீதிமன்றம் 77 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில், கவின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கவின் தனது தாயார் செய்த மோசடிக்காக தான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார், என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, கவின் தாயார் கைது செய்யப்பட்டதற்கு பிக்பாஸ் வீட்டிலி இருக்கும் போது கவினை காதலித்த சாக்‌ஷி, கவின் குடும்பத்தை யாரும் கலாய்க்காதீர்கள், அவர்கள் மிகவும் கவலைப்படுவார்கள் என்று ஒரு ட்விட்டை போட்டிருந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் போட்டியாளர் காயத்ரி ரகுராம் இதுகுறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில், இது போன்ற செய்திகளை பதிவிட்டு ஒருவரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம் கவின் வாழ்க்கையில் முன்னேற நினைத்து கடுமையாக போராடி வரும் ஒரு திறமையான நபர்.

ஒருவரின் சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடாக மட்டும் இல்லாமல் இங்கே பிறந்து வளர்ந்தவர்களையும் வாழ விடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் கவினின் தாயார் கைது செய்யப்பட்டதற்கு காயத்ரி ரகுராம் என்ன கூறியுள்ளார் பாருங்க..! 1

பிக்பாஸ் கவினின் தாயார் கைது செய்யப்பட்டதற்கு காயத்ரி ரகுராம் என்ன கூறியுள்ளார் பாருங்க..! 2

பிக்பாஸ் கவினின் தாயார் கைது செய்யப்பட்டதற்கு காயத்ரி ரகுராம் என்ன கூறியுள்ளார் பாருங்க..! 3

Back to top button