செய்திகள்

விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிகப்பெரும் நாள்- கோத்தபாயவின் நிகழ்வில் முரளீதரன்- இரண்டாம் இணைப்பு

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்  முத்தையா முரளீதரன் இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உண்மையான தலைவர் முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குபவர் எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளிற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அச்சம் என்பது பெரும் விடயம், நாங்கள் அச்சத்தில் பிடியின் வாழ்ந்துள்ளோம்,

1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்ட அனைத்து அழிக்கப்பட்டன எனது தந்தை தாக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைவரும் இந்தியாவிற்கு சென்றனர் ஆனால் நாங்கள் செல்லவில்லை நாங்கள் இங்கு வாழவிரும்பினோம் நான் இலங்கையன்.

இரு தரப்பும் தவறிழைத்தன,ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர்.

அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர்.

நாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தோம், நான் பெலவத்தையில் வசித்தவேளை எந்நேரமும் அரசியல்வாதியொருவர் தாக்கப்படலாம் என்ற அச்சத்தினால் நாடாளுமன்ற வீதியை பயன்படுத்துவதில்லை, கொழும்பும் அச்சத்துடனேயே வாழ்ந்தது.

தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர்.

மக்களிற்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான தலைவரிற்கே நான் வாக்களிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: – Virakesari.lk

Back to top button