ஏனையவை

வெளியேறிய தர்ஷன் பதிவிட்ட உருக்கமான முதல் பதிவு… என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளார். போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. தர்ஷன் தான் டைட்டில் வின்னர் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.

தற்போது தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், நமக்குத் தெரிந்த நபர்களிடமிருந்து அன்பை பெறுவது ஒரு நல்ல உணர்வு தான். ஆனால், நமக்குத் தெரியாத மற்றும் நாம் சந்திக்காத நபர்களிடமிருந்து அன்பை பெறுவது அதைவிட சிறந்த உணர்வு. இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

என் மீது வைத்துள்ள அன்பையும் ஆதரவையும் நான் உணர்ந்துள்ளேன். இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நான் பிக்பாஸ் இருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து இந்த 98 நாட்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளது என்னால் வார்த்தைகளால் கூற முடியாது. எனது மனம் முழுவதும் அன்பு நிலவி வருகிறது. விரைவில் உங்களை சந்திக்கிறேன் அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று தர்ஷன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Back to top button