செய்திகள்

வெளி நாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! நாடே சோகத்தில்!

உகண்டாவின் மேற்கு பகுதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனரகவாகனம் வேகக் கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மூன்று கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் போது ஏற்பட்ட தீப்பரவலில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button