செய்திகள்

அடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா? – தெளிவுபடுத்தியது அரசாங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் திடீர் அறிவிப்பினால் அடுத்த சில நாட்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்ற அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் விடுமுறை வழங்குவது தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நலகா கலுவேவா தெரிவித்துள்ளார்.

மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்டால் அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடும் என்றும் பொது மக்கள் இவ்வாறான போலி செய்திகளினால் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Back to top button