செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவருக்கும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த,  9 கைதிகளுக்கும் மற்றும் கந்தகாடு மத்தியநிலையத்தின் தொற்றாளர் ஒருவருடன் தொடர்பை பேணிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  2764 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2094 பேர் குணமடைந்துள்ளதோடு, 659 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, 63 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில்  கொரோனா  தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

Back to top button