செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் இன்றை தினம் மேலும் 10 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் மட்டும் 44 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 44 தொற்றாளர்களும் கடற்படை வீரர்கள் ஆவர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 567 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 434 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 295 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 126 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.