செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து..! காணொளி

இன்று காலை புத்தளம்-அனுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டுநாயக்கவிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்று, அதற்கு முன்னே சென்றுக்கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் ஆண்கள் நால்வரும் பெண்கள் நால்வரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் வசித்து வரும் குடும்பமொன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக சாலியவெவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து குறித்து சாலியவெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button