ஏனையவை

முதல் வேலையாக அம்மாவை ஜாமீனில் எடுத்த கவின்… பின்பு அவர் கூறியது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வியாழனன்று வெளியேறிய கவின் சீட்டு கம்பெனி மோசடியில் கைதான தனது தாயினை ஜாமீனில் எடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீட்டு கம்பெனி மோசடி வழக்கில் கவின் குடும்பத்தினைச் சேர்ந்த 3 பெண்களை பொலிசார் கைது செய்தனர். இதில் அவரது பாட்டி மற்றும் அம்மாவும் அடங்குவார். இவர்களுக்கு எதிராக 31 பேர் சாட்சியாக இருந்துள்ளனர்.

தீர விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் என தீர்மானித்து 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தினை திருப்பிக் கொடுப்பதற்கும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த கவின் தனது அம்மாவினையும், பாட்டியையும் ஜாமின் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தனது பாட்டி நடத்தி வந்த சீட்டு கம்பெனியினால் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தினை விரைவில் திருப்பி கொடுத்துவிடுவேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Back to top button