ஆன்மிகம்

(13.09.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil

பஞ்சாங்கம்

நாள்திங்கள்கிழமை
திதிசப்தமி மாலை 5.40 வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்அனுஷம் காலை 11.30 வரை பிறகு கேட்டை
யோகம்சித்தயோகம்
ராகுகாலம்காலை 7.30 முதல் 9 வரை
எமகண்டம்காலை 10.30 முதல் 12 வரை
நல்லநேரம்காலை 6.15 முதல் 7.15 வரை / மாலை 3 முதல் 4 வரை
சந்திராஷ்டமம்அசுவினி காலை 11.30 வரை பிறகு பரணி
சூலம்கிழக்கு
பரிகாரம்தயிர்
Today rasi palan tamil

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பயணத்தில் போது பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கி யம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் வருகையால் செலவுகள் ஏற்படும். வியா பாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். இன்று மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத் தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரி களால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பிள்ளைகள் வகையில் சில சங்க டங்கள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு எதுவுமிருக்காது. சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தெய்வப் பணிகளில் ஈடு படும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். வியா பாரத்தில் விற்பனை எதிர்பார்த்ததைவிட குறைவா கத்தான் இருக்கும். வேங்கடேச பெருமாளை வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடு படும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் தைரியம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனம் தேவை. தாயின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகவே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். ஆதாயம் கூடுதலாகக் கிடைக்க அம்பிகையை வழிபடவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனு கூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற் படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அரசாங்க அதிகாரிகளிடம் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி இழுபறிக் குப் பிறகு கிடைக்கும். இன்று துர்கையை வழிபடுவது நன்மை தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுவீர்கள். தாய் வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறு பாடு நீங்கும். வியாபாரம் விறுவிறுப் பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும். இன்று தட்சிணா மூர்த்தி வழிபாடு உங்கள் விருப்பங்களை நிறைவேற்றச் செய்யும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகர ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். அதே நேரம் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்குமுக்காட வைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறி, அனுகூலமாக முடியும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று நீங்கள் பைரவரை வழிபடுவது நன்மை தரும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்ப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத்துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறி யாகும். வியாபாரம் எதிர்பார்த்தது போலவே நடைபெறுவது மகிழ்ச்சி தரும். ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீன ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சிலருக்கு சகோதரர்களால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நவீன டிசைனில் புதிய ஆடைகளை வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். லாபமும் அதிகரிக்கும். இன்று நீங்கள் மகாவிஷ் ணுவை வழிபடுவது சிறப்பு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் ஆதாயம் ஏற்படும்.

Back to top button