செய்திகள்

இன்று வழங்­கப்­ப­ட­வி­ருந்த ரூ 1000 சம்­பள உயர்வு இல்லை

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இன்று முதல் 1000 ரூபா நாளாந்த சம்­ப­ளத்தை வழங்க எதிர்­பார்த்­தி­ருந்த போதிலும் கம்­ப­னி­க­ளுடன் சில விட­யங்­களில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டா­ததால் இழு­ப­றி ­நி­லையில் உள்­ளது. எவ்­வா­றா­யினும் அடுத்த வார­ம­ளவில் சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­படும் என பெருந்­தோட்டக் கைத்­தொழில் மற்றும் ஏற்­று­மதி கமத்­தொழில் அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரண தெரி­வித்தார்.

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான 1000 ரூபா நாளாந்த சம்­பளம் இன்று முதல் வழங்­கப்­படும் என்று அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக அறி­வித்து வந்த போதிலும், கம்­ப­னிகள் அதற்கு மறுப்பு தெரி­வித்­தன.

இந்­நி­லையில் அர­சாங்கம் அறி­வித்த படி 1000 ரூபா நாளாந்த சம்­பளம் வழங்­கப்­ப­டுமா என்று வின­விய போதே  அமைச்சர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், அடிப்­படை சம்­பளம் 1000 ரூபா என்­பது பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் நீண்ட கால கோரிக்­கை­யாக இருந்­தது. எனினும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் அடிப்­படை சம்­ப­ள­மாக இல்­லா­விட்­டாலும் நாளாந்த சம்­ப­ள­மாக 1000 ரூபா­வினை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது.

இது தொடர்பில் பெருந்­தோட்டக் கம்­ப­னி­க­ளுடன் பல பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் 1000 ரூபா நாளாந்த சம்­ப­ளத்தை வழங்­கு­வ­தற்கு கம்­ப­னிகள் அர­சாங்­கத்­திடம் பல நிபந்­த­னை­களை முன்­வைத்­தன. அவற்றில் சில­வற்றை ஏற்றுக் கொள்­வதில் சிக்­கல்கள் உள்­ளன.

எவ்­வா­றி­ருப்­பினும் இந்த முயற்­சியை நாம் கைவிடப் போவ­தில்லை. திட்­ட­மிட்ட படி இன்­றி­லி­ருந்து 1000 ரூபாவை வழங்க முடி­யாமை கவலையளிக்கிறது. எனினும் எதிர்வரும் ஒரு வார கால பகுதிக்குள் மீண்டும் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சம்பள அதிகரிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Sources : Virakesari

Back to top button