செய்திகள்

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!! சுற்றுநிரூபம் வௌியீடு!

அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கும் சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

திறைச்சேரியின் அனுமதியுடன் அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் அமைச்சுக்களில் செயலாளர்கள் , மாகாண தலைமை செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு மேற்படி சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த கொடுப்பனவை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்க இம்முறை பாதீட்டின் மூலம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாய் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்பட்டாலும் , அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 7800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!! சுற்றுநிரூபம் வௌியீடு! 1

Back to top button