ஆன்மிகம்

(19.09.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil

பஞ்சாங்கம்

நாள்ஞாயிற்றுக்கிழமை
திதிதிரயோதசி காலை 6.40 வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்சதயம்
யோகம்சித்தயோகம்
ராகுகாலம்மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம்பகல் 12.00 முதல் 1.30 வரை
நல்லநேரம்காலை 7.15 முதல் 8.15 வரை/ பகல் 3.15 முதல் 4.15 வரை
சந்திராஷ்டமம்பூசம்
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்
Today rasi palan tamil

மேஷ ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மாலையில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மற்ற வர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபட சங்கடங்கள் குறையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். வெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். பிற்பகலுக்குப் பின் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். ஷீர்டி சாய்பாபாவை வழிபட சிரமங்கள் குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. காரியங்கள் இழுபறியாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் பணவிரயத்துக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவி செய்வார். வெளியில் செல்லும்போது கைப் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். வேங்கடேச பெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை எளிதில் முறியடிப் பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் இன்றைய நாள் மகிழ்ச்சியானதாக அமையும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது மிக அவசியம்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனுள்ள தாக இருக்கும். அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருக்கும். துர்கை வழிபாடு தடைகளைத் தகர்த்து வெற்றி பெற வைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கூடுதல் கவனமாக இருக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்து ஈடுபடவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். குலதெய்வ வழி பாடு இன்றைய தினத்தை மகிழ்ச்சி உள்ளதாக மாற்றும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்களால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபா ரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்தாலும், பணியாளர்களால் திடீர் செலவுகளும் ஏற்படும். சிவவழிபாடு சிரமங்களைப் போக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலாகக் கிடைக் கும். விநாயகரை வழிபட காரியங்கள் தடையின்றி சாதகமாக முடியும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகர ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். தாய்வழிஉறவினர்களால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சி யுடன் வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி அந்நி யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றா லும் சமாளித்து விடுவீர்கள். பைரவரை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.

கும்ப ராசி அன்பர்களே!

இன்று சாதிக்கும் நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். அவரின் தேவைகளை நிறைவேற்று வீர்கள். செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். லட்சுமி நரசிம்மரை வழி படுவதன் மூலம் கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மீன ராசி அன்பர்களே!

அனுகூலமான நாளாக இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் கேட்கும் உதவியை மறுக்காமல் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் உற்சாகமாகச் செயல்பட முடியும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

Back to top button