செய்திகள்

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின் அழைக்கவேண்டிய இலக்கத்தை அறிவித்தார் அனில் ஜாசிங்க

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் தொடர்புகொண்டு சுகாதார பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, நோயாளிகள் தொடர்பான விடயங்கள் நாளாந்தம் பொது மக்களுக்கு அறிவிக்ப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், மக்களுக்கிடையி்ல் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் உண்மைக்குப்புறம்பான தகவல்களில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Back to top button