செய்திகள்

இலங்கையில் மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் இன்று (19.04.2020) மாலையாகும் போது மேலும் 13 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாத்திரம் இதுவரை 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 269 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 158 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 122 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 91 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button