செய்திகள்

அமெ­ரிக்க நாட்­ட­வரிற்கு யாழ்ப்­பா­ணத்தில் நேர்ந்த கதி! விசா­ர­ணை­கள் தீவிரம்

யாழ்ப்­பா­ணம், கோண்­டா­வில் பகு­தி­யில் அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வ­ரி­டமிருந்து பணம் பறிக்­கப்­பட்­டுள்­ளதாக கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­துக்கு அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வர் சுற்­றுப்­ப­ய­ணம் வந்­துள்­ளார். அவர் நேற்று மதி­யம் கோண்­டா­வில் பகு­தி­யில் சென்றுள்ளார்.

அப்­போது மோட்டார் சைக்கிளில் அவ­ரைப் பின்­தொ­டர்ந்து சென்ற இளை­ஞர்­கள் இரு­வர் அவ­ரி­டம் இருந்து 300 டொல­ரைப் பறித்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்ளதாக கூறப்­ப­டு­கின்­றது.

அதை­ய­டுத்து அந்த அமெ­ரிக்க நாட்­ட­வர் கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ளார்.

முறைப்­பாட்டை அடுத்­துப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Back to top button