ஆன்மிகம்

(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil

பஞ்சாங்கம்

நாள்செவ்வாய்க்கிழமை
திதிதிரிதியை காலை 9.17 வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்அஸ்தம் காலை 8.43 வரை பிறகு சித்திரை
யோகம்சித்தயோகம்
ராகுகாலம்பகல் 3 முதல் 4.30 வரை
எமகண்டம்காலை 9 முதல் 10.30 வரை
நல்லநேரம்காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 1.30 முதல் 2.30 வரை
சந்திராஷ்டமம்சதயம் காலை 8.43 வரை பிறகு பூரட்டாதி
சூலம்வடக்கு
பரிகாரம்பால்

மேஷராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். உறவினர்கள் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும்.. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக் கம் போல இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். காரியங்கள் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப் பார்கள். விட்டுப்பிடித்துச் செல்லவும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் இருக்கும். இன்று அம்பிகை வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

மிதுனராசி அன்பர்களே!

சாதிக்கவேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளில் நன்றாக சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம். ஆஞ்சநேயர் வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

கடகராசி அன்பர்களே!

எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

சிம்மராசி அன்பர்களே!

சிந்தித்து செயல்படவேண்டிய நாள். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும் என்றாலும் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். துர்கையை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கன்னிராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகப்பெருமானை வழிபட விக்கினங்கள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.

துலாராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். முக்கிய முடிவு எடுப்பதில் அவசரம் வேண்டாம். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் பணம் கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் கவனமாக இருக்கவும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகராசி அன்பர்களே!

மனதில் தெளிவாகச் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். இன்று குடும்பம் தொடர்பான பிரச்னையை பேசி முடிவுக்குக் கொண்டுவர உகந்த நாள். சிலருக்கு குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். செலவு கள் அதிகரித்தாலும் அதற்கேற்ற பணவரவும் இருப்பதால் பிரச்னை இருக்காது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமார்தான். பைரவரை வழிபடுவது சிறப்பு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைக்கக் கூடும்.

தனுசுராசி அன்பர்களே!

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர் கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இளைய சகோதரர்கள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள் வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர் கள். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பதால் மகிழ்ச்சியே உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். அதிகாரிகள் கண்டிப்பாக நடந்து கொள்வார்கள். நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு பிரச்னை ஒன்று ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப் பதை இன்றைக்குத் தவிர்த்துவிடுவது மிகவும் அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

மீனராசி அன்பர்களே!

பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள் .தந்தைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். நீண்டநாள்களாக தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவது உற்சாகம் தரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சுமுகமாகப் பழகுவார்கள். வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது அவசியம்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

Back to top button