ஆன்மிகம்

(09.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil

பஞ்சாங்கம்

நாள்புதன் கிழமை
திதிசதுர்த்தசி பகல் 3.00 வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்கிருத்திகை காலை 10.00 வரை பிறகு ரோகிணி
யோகம்சித்தயோகம்
ராகுகாலம்பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்காலை 7.30 முதல் 9 வரை
நல்லநேரம்காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்சித்திரை காலை 10.00 வரை பிறகு சுவாதி
சூலம்வடக்கு
பரிகாரம்பால்
Today rasi palan tamil

மேஷராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளைச் செய்துவருவது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர உறவுகளால் செலவுகள் ஏற்படும்.

ரிஷபராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரண மாக உடல் அசதி உண்டாகும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மனஅமைதி பெறலாம். சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் நன்மையும் ஆதாயமும் ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரோடும் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ஆலோசனை உறவினர்களால் பாராட்டப்படும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் நற்பெயர் ஏற்படு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சியில் கூடுதல் கவனம் தேவை.

கடகராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாளாக அமையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர் களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் உறவினர் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு இறைவழிபாட்டில் மனம் செல்லும். சூரியபகவானை வழிபடுவது நலம் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளிவட்டாரத்தில் சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் அமைதியும் அன்பும் நிலைத்திருக்கும்.

கன்னிராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பான பலன்கள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குழப்பங்கள் படிப்படியாக விலகி தெளிவு பிறக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விவாதங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டிய நாள்.

துலாராசி அன்பர்களே!

பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்கள் மூலம் உற்சாகம் தரும் செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதல் தரும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக்கொள்வார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்ய முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இறைவழிபாட்டில் ஈடுபடுதன் மூலம் குழப்பங்கள் தீரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

விருச்சிகராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். விநாயகரை வழிபட வெற்றிகள் வசப்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

தனுசுராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். இன்று நீங்கள் பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் கவனம் தேவை.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் அந்நியோன்யமும் அதிகரிக்கும்.

மகரராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல் நலனில் கவனம் தேவை. மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் நடைபெறும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறிய அளவில் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கும்பராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் விருப் பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சிவபெருமானை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களை அனுசரித்துப் போவது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

மீனராசி அன்பர்களே!

உறவினர்களால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இழுபறியாக இருந்த தொகை கைக்குக் கிடைக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாருக்கும் வாக்குறுதிகள் தரவேண்டாம்.

Back to top button