செய்திகள்

பறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம் – 226 பயணிகளை காப்பாற்றிய விமானி

பறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது இதில் பயணித்த 226 பேர் காப்பாற்றப்பட்டதாக சர்வதேச ஊடங்கள் தவலை வெளியிட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜீன்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள காட்டில் தரையிறக்கி 226 உயிர்களை காப்பாற்றியுள்ளார் விமானி.

சோளக்காட்டில் தரையிறங்கிய விமானம் ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள ஜுகோஸ்கி விமான நிலையத்திலிருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோலுக்கு யூரல் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஏர்பஸ் ‘ஏ321’ விமானம் 226 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று விமானம் மீது பயங்கரமாக மோதியது. இதனால் இரண்டு என்ஜீன்களும் சேதமடைந்துள்ளது.

 

சோளக்காட்டில் தரையிறங்கிய விமானம் உடனடியாக விமான ஊழியர்கள் விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் எதையும் பற்றி யோசிக்காமல் விமானி மக்காச்சோளம் காட்டில் அவசரமாக தரையிறக்கினார்.

இதன் போது,  9 குழந்தைகள் உட்பட 23 பேர் காயம் அடைந்தனர்,  குறித்த சம்பவத்தில்  உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விமானியின் துணிச்சலான முடிவால் 226 பயணிகள் உயிர்தப்பியதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Back to top button