ஆன்மிகம்

(01.09.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil

பஞ்சாங்கம்

நாள்புதன் கிழமை
திதிதசமி
நட்சத்திரம்மிருகசீரிடம் பகல் 12.50 வரை பிறகு திருவாதிரை
யோகம்சித்தயோகம்
ராகுகாலம்பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்காலை 7.30 முதல் 9 வரை
நல்லநேரம்காலை 10 முதல் 11 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம்விசாகம் பகல் 12.50 வரை பிறகு அனுஷம்
சூலம்வடக்கு
பரிகாரம்பால்
Today rasi palan tamil

மேஷ ராசி அன்பர்களே!

ன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று அம்பிகையை வழிபட, காரியத் தடைகள் விலகும்

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

பொறுமை மிக அவசியமான நாள். பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உடல்நலனில் கவனம் தேவை. சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு விலகும். குடும்ப விழாக்களில் பேச்சில் கவனம் தேவை. உறவினர்களிடம் அதீத உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் அதன் காரணமாக சோர்வும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட, சிரமங்கள் குறையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பது மகிழ்ச்சி தரும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும், பெரிதாக பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போல் நடைபெறும். விநாயகப் பெருமானை வழிபட, மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

கடக ராசி அன்பர்களே!

னுகூலமான நாளாக இருக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். மகா விஷ்ணுவை வழிபட, நல்ல திருப்பம் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று சுபச் செய்தி வந்து சேரும். மனச் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு; அவர்கள் மூலம் மனதுக்கு இனிய தகவல் வந்து சேரும். காலையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களின் மூலம் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆவணங்கள் மற்றும் ஆபரணங்களைக் கையாள்வதில் கவனத்துடன் செயல்படவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம்.

கன்னி ராசி அன்பர்களே!

தாயின் விருப்பங்கள் நிறைவேறும் நாள். மனத்தில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றினாலும், இறை வழிபாடு மூலம் அமைதி கிட்டும். அவசர முடிவுகள் வேண்டாம். எதிலும் நிதானம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

துலா ராசி அன்பர்களே!

பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முடிவு எடுப்பதாக இருந்தால், ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட, மகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிக ராசி அன்பர்களே!

ன்று முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. பிற்பகலுக்கு மேல் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். காலபைரவரை வழிபடுவது நலம் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைத் தொடர்புகொண்டு பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபட, காரியங்கள் அனுகூலமாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

மகர ராசி அன்பர்களே!

ன்று எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. நட்பு வட்டாரத்தில் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களால் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வெளியில் சாப்பிடுவதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று நரசிம்மரை வழிபட, காரியங்கள் அனுகூலமாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வெளி உணவுகளை அவசியம் தவிர்த்துவிடவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனச் சங்கடங்கள் உண்டாகலாம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியத் தடை உண்டகும்; பிரயத்தனத்துடன் செய்து முடிப்பீர்கள்.

கும்ப ராசி அன்பர்களே!

கிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். ஆனால், விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். இன்று நீங்கள் பைரவரை வழிபட, நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்க்கைத்துணையால் ஆதாயம் பெறுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீன ராசி அன்பர்களே!

னுகூலமான நாள் இன்று. தடைகள் நீங்கி காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கேட்ட இடத்தில் கேட்டபடி உதவிகள் கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கி, மன நிம்மதி வாய்க்கும். எதிர்பாராத வகையில் பண வரவு உண்டு. பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி நிறையும். சிலருக்கு எதிர்பாராத திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களிடம் கண்டிப்பும் விரோதமும் வேண்டாம்; பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில், எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் லாபம் கிடைக்கும். இன்று கணபதியை வழிபட, பிரச்னைகள் நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் செலவுகளும் அலைச்சலும் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வியாபார லாபம் கூடுதலாகக் கிடைக்கும்; முயற்சிகள் பலிதமாகும்.

Back to top button