ஆன்மிகம்

(08.08.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil

பஞ்சாங்கம்

நாள்ஞாயிற்றுக்கிழமை
திதிஅமாவாசை இரவு 7.56 வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்பூசம் காலை 10. 32 வரை பிறகு ஆயில்யம்
யோகம்சித்தயோகம்
ராகுகாலம்மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம்பகல் 12.00 முதல் 1.30 வரை
நல்லநேரம்காலை 6.15 முதல் 7.15 வரை/ பகல் 3.15 முதல் 4.15 வரை
சந்திராஷ்டமம்மூலம் காலை 10.32 வரை பிறகு பூராடம்
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்
Today rasi palan tamil

மேஷ ராசி அன்பர்களே!

கிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருக்கும். இன்று சிவபெருமான் வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சியைத் தவிர்க்கவும்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகி முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தைவழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

னுகூலமான நாள். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். அம்பிகை வழிபாடு நன்று.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வீட்டில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

ற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்கள் போக்கிலேயே சென்று விட்டுப் பிடிப்பது நல்லது. வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்து கொள்வார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். குரு வழிபாடு நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்

கடக ராசி அன்பர்களே!

பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்களிடம் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுடைய பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது நல்லது.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

ல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் கிடைக்கும். சிலருக்குத் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

துலா ராசி அன்பர்களே!

னதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தையுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சுமுக உறவு ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாகும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். அம்பிகை வழிபாடு நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

ன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. முக்கிய முடிவு எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். இன்று நீங்கள் கால பைரவரை வழிபடுவது நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணைவர் வழியில் செலவுகள் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்

மகர ராசி அன்பர்களே!

கிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் முயற்சிகளுக்குத் தேவையான ஆத ரவு கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிரமமான சூழ்நிலையே காணப்படுகிறது. இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, மாலையில் பிள்ளைகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கும்ப ராசி அன்பர்களே!

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வரும். சிலருக்குத் தந்தைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுபச்செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் ஏற்படுவதற்கில்லை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

மீன ராசி அன்பர்களே!

ன்று எதிலும் பொறுமை அவசியம். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டியிருக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மனவருத்தம் தரும். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். குடும்பப் பெரியவர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச் சுமையால் அசதி ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவது தாமதமாகும்.

Back to top button