ஆன்மிகம்

(25.08.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil

பஞ்சாங்கம்

நாள்புதன் கிழமை
திதிதிரிதியை மாலை 6.04 வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்உத்திரட்டாதி இரவு 11.12 வரை பிறகு ரேவதி
யோகம்சித்தயோகம் இரவு 11.12 வரை மரணயோகம்
ராகுகாலம்பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்காலை 7.30 முதல் 9 வரை
நல்லநேரம்காலை 10 முதல் 11 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம்மகம் இரவு 11.12 வரை பிறகு பூரம்
சூலம்வடக்கு
பரிகாரம்பால்
Today rasi palan tamil

மேஷ ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் செலவுகள் கையிருப்பைக் கரைப்பதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாயாரின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்குப் பணவரவுடன் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளையிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்,

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை கேட்பதை வாங்கித் தந்து மகிழ்விப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று விநாயகரை வழிபடுவது நற்பலன்களை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வீட்டில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

னதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்குக் குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்குமேல் செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி சற்று தாமதமாகக் கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கன்னி ராசி அன்பர்களே!

கோதரர்களின் தேவைகளை நிறைவேற்று வீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விற்பனையும் லாபமும் எப்போதும்போல் இருக்கும். இன்று விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

துலா ராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். ஆனாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். இன்று நரசிம்மர் வழிபாடு சிறப்பு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அவர்கள் கேட்பதை வாங்கித் தந்து மகிழ்விப்பீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். விநாயகப் பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உறவினர்கள் மூலம் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

னதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோத ரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப்பது உற்சாகம் தரும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மகர ராசி அன்பர்களே!

கோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பதுடன் செலவுகளும் அதிகரிக்கும். இன்று நீங்கள் பைரவரை வழிபடுவது நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, மாலையில் நண்பர் களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வீண் அலைச்சலைத் தவிர்ப்பது அவசியம்.

கும்ப ராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியம். இன்று நீங்கள் அம்பிகையை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொடுக்கல்வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் காரியம் அனுகூலமாகும்.

மீன ராசி அன்பர்களே!

ன உறுதியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்குமேல் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் செலவுகள் ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

Back to top button