செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் இலங்கையில் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களில் 4 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் என்றும் ஒருவர் குவைத் நாட்டிலிருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவரெனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,459 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1,980 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று நோயாளர்களில் 468 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 65 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button