செய்திகள்
வறுமையை ஒழிப்பதே எமது நோக்கம்..!
மக்களை மையமாக கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் வறுமையை ஒழிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கை சமுர்தி அபிவிருத்தி சங்கம் மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 1 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.