செய்திகள்

ராஜாங்கனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்; இலங்கையில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

ராஜாங்கனை பகுதியில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,515 ஆக உயர்வடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 1,980 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று நோயாளர்களில் 520 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 65 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button