செய்திகள்

இலங்கை : இலஞ்சம் பெற்ற நீதிவானுக்கு 16 வருட கடூழிய சிறை

பிரதிவாதி தரப்புக்கு சாதகமாக வழக்குத் தீர்ப்பொன்றினை கொடுப்பதற்காக பெண் ஒருவரிடமிருந்து 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற ஹோமாகம முன்னாள் மாவட்ட நீதிபதி மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் 16 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி ஆதித்த பட்டபெத்தி இந்த தீர்ப்பை இன்று வழங்கினார்.

அத்துடன் கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக  குற்றவாளிகள் இருவரும் தலா 20 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும்.

அதனைவிட, குற்றவாளிகள் இருவரும் இலஞ்சமாக பெற்ற 3 இலட்சம் ரூபா பணத்தை, இருவரிடமிருந்தும் தனித்தனியாக அறவிட வேண்டும். அதனை அவர்கள் செலுத்தாவிடின் மேலும் 6 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Back to top button