செய்திகள்

இலங்கையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் மரணம்..! கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு

இலங்கையில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக காணப்படும் நிலையில் இன்று காலை மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button