செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில்,

இன்று (20.03,2020)கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் , 59பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், தற்போது 65 பேராக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு இலங்கையில், 218 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

Back to top button