செய்திகள்
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா ! : தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் 3 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இதுவரை 120 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் குணமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.