செய்திகள்

கொரோனா வைரஸில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க சுதேசிய ஆயுர்வேத முறை : ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனம்

கொரோனா வைரஸில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க சுதேசிய ஆயுர்வேத முறையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு தேவையான இஞ்சியை சரியான வகையில் உலர்த்துவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றது.

கொரோனா வைரசுக்கு ஆயர்வேத சுதேசிய மருந்தக கூட்டுத்தாபனம் ரத்த கல்க்கய, புத்தராய கல்க்கய, நவரத்ன கல்க்கய, சீதாராமகுலி ஆகியவற்றை பெருமளவில் சந்தைக்கு விநியோகித்திருப்பதாக திருமதி. சாகல அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

நாட்டில் உற்பத்தியாளர்களிடம் இருந்து உலர்த்தப்படாத இஞ்சியை கொள்வனவு செய்வதற்கு தயாராகியுள்ளது. ஓரு கிலோ இஞ்சி 80.00 ரூபாவிற்கும் 90.00 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலைக்கு வழங்க விருப்பம் உள்ளோர் அது தொடர்பாக 011 2850229 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும். மொத்தமாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது எனவும் அவர் தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button