செய்திகள்

கொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்… தீயாய் பரவும் காட்சி

கொரோனாவின் தாக்கம் எப்போது குறையும் என்று 14 வயது இந்திய சிறுவன் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசிய காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

கடந்த, 2019 ஆகஸ்ட் மாதம், ஒரு வீடியோவில் அதில், 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை, கணித்து கூறியுள்ளார்.

மிகவும் அரிதாக, செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை, சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில், ஒரே நேர்கோட்டில் வருகின்றன.

இம்மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

இவை இணைவதால், அதிகமான கதிர்வீச்சு, பூமியை தாக்கும். அதேநேரம் சந்திரனும், ராகுவும் இணைவதும், சக்தி வாய்ந்ததாகும்.

ராகு, உலகில் நோய்களை பரப்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அது மாத்திரம் அல்ல, கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என்றும் அந்த சிறுவன் கணித்துள்ளார்.

தற்போது உலகை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மனிதர்களுக்கும், வைரசுக்கும் இடையிலான போராக, இது பார்க்கப்படுகிறது.

இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்நோயின் தாக்குதல் எப்போது குறையும் என மக்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனா நோய் பரவாமல் இருக்க, தண்ணீருடன், மஞ்சள், எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கொதித்து ஆவி வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, தலை மீது துண்டை போர்த்தி, அந்த ஆவியை நுகர வேண்டும். அது, மூக்கு துவாரத்தின் வழியே சென்று, கிருமிகளை அளிக்கும் புத்துணர்ச்சி தரும்.

சூரிய ஒளியில், அதிக நேரம் நிற்கலாம் என்றும் சிறுவன் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

Sources Manithan.com

Back to top button