ஆன்மிகம்

(04.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Rasi Palangal Tamil

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

பஞ்சாங்கம்

நாள் வெள்ளிக்கிழமை
திதி சதுர்த்தி மாலை 6.26 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் புனர்பூசம் பகல் 12.48 வரை பிறகு பூசம்
யோகம் சித்தயோகம் பகல் 12.48 வரை பிறகு மரணயோகம்
ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / பகல் 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம் கேட்டை பகல் 12.48 வரை பிறகு மூலம்
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

Rasi Palangal

மேஷராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தை யிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபராசி அன்பர்களே!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலையில் குடும்பப் பெரியவர் களின் ஆலோசனை அவசியம். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் அனுசரித்துச் செல் வது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்,

மிதுனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வெளியில் செல்லும்போது தக்க முன்னெச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைப் போலவே இருப்பது மகிழ்ச்சி தரும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடகராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்குவதுடன் அவருடைய ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களிடம் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும். பிள்ளை களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். அம்பிகை வழிபாடு அல்லல் தீர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கன்னிராசி அன்பர்களே!

சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளுடன் அனுசரணை யாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

துலாராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், சிலருக்கு அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்க நேரிடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடு விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும். நரசிம்மர் வழிபாடு நலம் தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

விருச்சிகராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மனதில் சற்று சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். முருகப்பெருமானை வழிபட மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசுராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் ஆதாயம் கிடைப் பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பால் முயற்சி சாதகமாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி கூடுதல் ஆதாயம் தருவதாக முடியும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் சகோதர வகையில் சில சங்கடங் கள் ஏற்பட்டு விலகும்.

மகரராசி அன்பர்களே!

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். இன்று நீங்கள் பைரவரை வழிபடுவது நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவு கள் ஏற்பட்டாலும் அதனால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியே ஏற் படும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மீனராசி அன்பர்களே!

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணலாபம் உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்குமேல் உறவினர் களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயாரின் தேவைகளை நிறைவேற் றும் வகையில் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று சிவ பெருமானை வழிபடுவது நன்று.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் காரியம் அனுகூலமாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

 

Back to top button