ஆன்மிகம்

Daily Horoscope : 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.. இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20.02.2020 )..!

20.02.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 08 ஆம் நாள் வியாழக்கிழமை (Daily Horoscope For All Signs)

மேஷராசி அன்பர்களே!

தேவையான பணம் இருந்தாலும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சியை பிற்பகலுக்கு மேல் தொடங்கு வது சாதகமாக முடியும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத் தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க் கவும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைப்பதற்கில்லை. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். பணியா ளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

மிதுனராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். மாலை யில் குடும்பத்துடன் உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.

கடகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தேவையான பணவரவு இருக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சி சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு உற்சாகமும், மகிழ்ச்சியும் தரும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை பெரிதும் பாராட்டப்படும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சிம்மராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கண வன் – மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதிரிகளின் தொல்லை கள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். புதிய வாடிக்கையாளரின் அறிமுகம் கிடைக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்ககும். அதனால் ஆதாயமும் உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

கன்னிராசி அன்பர்களே!

தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவை. தேவையில்லாத அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் பேசும் போது பொறுமை அவசியம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர் களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். ஆனால், பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

துலாராசி அன்பர்களே!

மனதில் நிம்மதி ஏற்படும். தேவையான பணம் கையில் இருப்பதால் செல வுகளைச் சமாளிக்க முடியும். எடுத்த காரியங்கள் தடையின்றி முடியும். தாயின் உடல்நலனில் கவ னம் தேவை. வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீட்டில் உறவினர்கள் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாக மாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக் கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

தனுசுராசி அன்பர்களே!

குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன் றைக்குத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். காரியங் களில் தடை, தாமதம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியா பாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது அவசியம்.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது சிலருக்கு வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். லாபம் வழக்கம்போலவே இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

தேவையற்ற அலைச்சலும், அதனால் வீண் செலவுகளும் ஏற்படும். தேவையில்லாத குழப்பங்களின் காரணமாக எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் தவிப்பீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர் களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. குடும்பப் பொறுப்புகளை உற்சாகமாக நிறைவேற்றுவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும்.. அலுவலகத்தில் சக ஊழியர்களால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

Back to top button