செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 166 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 27 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.