செய்திகள்

புகையிரதங்களில் மோதுண்டு நால்வர் பலி…..!

பயணித்துகொண்டிருந்த புகையிரதத்தில்  புகையிரதங்களில் மோதுண்டு நால்வர் பலி…..!

பேராதெனிய மற்றும் பிலிமதலாவைக்கு இடையே பயணித்துகொண்டிருந்த புகையிரதத்தில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். 69வது மைல் கல் இடத்திலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இதேவேளை, நேற்றிரவு பொல்காவலை-கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் மரணித்துள்ளார்.

அதேபோல, பதுளை நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதி 50 வயதுடைய நபரொருவர் பலியாகியுள்ள சம்பவமொன்றும் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Back to top button