செய்திகள்

உறுதி

 பாலைவனப் பூ ஒன்று
 பக்குவமாய் சொல்கிறது
 நீர் ஆகாரம் எதுவுமின்றி 
 சிரிக்கின்றேன் நான்.
 பட்டமரம் ஒன்று
 பறைகிறது
 பச்சையம் ஏதுமின்றி
 வேரூன்றி இருக்கிறேன் நான்.
 காற்றோடு கதைபயிலும் 
 மெல்லிய கொடி ஒன்று
 மெல்லமாய் சொல்கிறது
 ஆதாரம் ஏதுமின்றி
 வாழ்கிறேன் நான்.
 மனதில் உறுதி கொண்டால்
 வாழ்ந்து விடலாம்
 பூமியிலே
 ஊனம் ஒரு குறையல்ல
 உள்ளம் நிறைந்திருக்கும் போது….
உறுதி 1

Back to top button