செய்திகள்
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு…!
இலங்கையில் மக்கள் மத்தியில் நாணயம் மற்றும் நாணய தாள்களின் பயன்பாட்டினை குறைக்கும் நோக்கில் , இவ்வருடத்தை இலங்கை மத்திய வங்கி ”டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் கணக்கு” வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
மேலும், டிஜிட்டல் மூலமான கொடுப்பனவு முறையை பொது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யப்படுத்துவதற்கு எதிர்வரும் மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம் நாணயம் மற்றும் நாணய தாள்களுக்காக செலவாகும் தொகையை குறைப்பதற்கு முடியும் என எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.