செய்திகள்

புரெவி சூறாவளி கடந்து சென்றாலும் மழை பெய்யக்கூடும்..!

புரெவி சூறாவளி நாட்டை கடந்து சென்றுள்ள போதிலும் நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எந்நேரத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button