செய்திகள்

அரசு வேலை என்பதால் குப்பை அள்ளும் வேலையை பார்க்கும் கோவை எம்.பி.ஏ பட்டதாரி

கோவை மாநகராட்சி துப்புரவு பணியில் எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர்

கோவையில் எம்.பி.ஏ., படித்துவிட்டு எம்.என்.சி நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய கோவை பட்டதாரி ஒருவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியில் சேர்ந்தது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். சமீபத்தில் நேர்காணல் நடத்தப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஐதராபாத்தில் எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய கோவையை சேர்ந்த சையத் முக்தார் அகமது அப்பணியை விட்டுவிட்டு துப்புரவு பணியில் சேர்ந்துவிட்டார்.

அரசு வேலையில் பணி நிரந்தரம், பாதுகாப்பு இருப்பதால், ரூ.35 ஆயிரம் மாத சம்பளம் பெற்ற, தனியார் நிறுவன வேலையை உதறிவிட்டு, ரூ.16 ஆயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

Back to top button