செய்திகள்

பாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை

வவுனியாவிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதுடன் இரண்டு மாத காலமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இன்று காலை பாடசாலை ரீதியாக பெற்றோர்கள் அழைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்பிரிவு வகுப்பு ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று பாடசாலை சென்ற பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கான விடுமுறைகால சுய கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டதுடன் பாடசாலையில் சிரமதானம் நாளை முதல் மேற்கொள்வதற்கு ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்புக்களை வழங்குமாறும்  ஒவ்வொரு தினங்களிலும் வகுப்பு ரீதியாக செயற்படுத்தி சிரமதானங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை மீளத்திறந்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கம் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button